முகக்கவசம் அணிவதில் அலட்சியம் காட்டும் பிரபல நாட்டு மக்கள்! ஆய்வில் தெரியவந்த உண்மை
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்படும் நிலையில், அது இந்திய மக்களிடையே வெகுவாக குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா பல்வேறு வகைகளில் உருமாறி தீவிரமாக பரவி வருகிறது. இருப்பினும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இது கட்டுப்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது இந்த வைரஸ் புதிய மாறுதல்களுடன் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்க பட்டுள்ளதால்(ஒமைக்ரான் வைரஸ்), உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கட்டுப்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற வலைதள ஆய்வு நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், இந்தியாவில் 364 மாவட்டங்களைச் சேர்ந்த, 25 ஆயிரம் பேரிடம் கொரோனா குறித்து கேட்ட போது, வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிவதாக, 29 சதவீதம் மக்கள் தெரிவித்துள்ளனர்,.
இது குறித்து இந்நிறுவனத்தின் நிறுவனர் சச்சின் தபாரியா கூறுகையில், கொரோனா பரவலை தடுப்பதில் முக கவசமும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓர் அறையில் முக கவசம் அணியாமல் இருவர் இருந்தால், 10 நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதித்தவரிடம் இருந்து மற்றவருக்கு பரவி விடும் ஆபத்து உள்ளது.
அதே சமயம் N-95 முக கவசம் அணிந்திருந்தால் வைரஸ் பரவ 600 மணி நேரம் ஆகிறது. நாங்கள் நடத்திய ஆய்வின் போது, வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிவதாக, 29 சதவீதத்தினர் தெரிவித்திருந்தனர்.
இது, கடந்த செப்டம்பர் மாதம் 12 சதவீதமாக குறைந்து, நவம்பரில் 2 சதவீதமாக சரிவடைந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததால் மக்கள் முக கவசம் அணிவதை அலட்சியப்படுத்தி வருவதாக எச்சரித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022