இந்தியாவின் தனியார் விண்வெளி துறை வரலாற்றுச் சாதனை., வெற்றிகரமாக ஏவப்பட்ட GalaxEye Mission Drishti
இந்தியாவின் தனியார் விண்வெளி துறையில் வரலாற்றுச் சாதனையாக, பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் GalaxEye தனது முதல் செயற்கைக்கோள் Mission Drishti-யை வெற்றிகரமாக ஏவியுள்ளது.
இன்று (மே 3) SpaceX Falcon 9 ரொக்கெட் மூலம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
190 கிலோ எடையுடைய இந்த செயற்கைக்கோள், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.
உலகளவில் முதன்முறையாக, Electro-Optical (EO) மற்றும் Synthetic Aperture Radar (SAR) சென்சார்கள் ஒரே தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இதனால், எந்த வானிலை சூழலிலும், பகல்-இரவு எப்போதும் பூமியின் தெளிவான படங்களைப் பெற முடியும்.
GalaxEye நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO சுயாஷ் சிங், “ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் விளைவாக Mission Drishti உருவானது. உலகளவில் அரசாங்கங்களும், வணிக நிறுவனங்களும் எங்கள் தரவுகளுக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றன” என தெரிவித்துள்ளார்.
இந்த செயற்கைக்கோள் பாதுகாப்பு, வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு, உள்கட்டமைப்பு திட்டமிடல் போன்ற பல துறைகளில் பயன்படும்.

IN-SPACe தலைவர் டாக்டர் பவன் கோயங்கா, “இந்தியாவின் தனியார் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு Mission Drishti ஒரு முக்கிய மைல்கல்” என பாராட்டியுள்ளார்.
ISRO-வின் 29 பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களுடன் இணைந்து, Mission Drishti இந்தியாவின் விண்வெளி திறனை உலகளவில் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது..
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#GalaxEye #MissionDrishti #IndiaSpace #SatelliteLaunch #OptoSAR #ISRO #SpaceTech #EarthObservation #Falcon9