அஜீரண பிரச்சினையா? இந்த கை வைத்தியதை பயன்படுத்துங்கள்!
சரியாக உணவின் அளவு தெரியாமால் உண்பவர்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிடாதவர்களுக்கு அஜீரண கோளாறு ஏற்படுகிறது.இது போனற செரிமான பிரச்சினைகள் மருத்துவ முறையில் டிஸ்பெப்ஸியா என அழைக்கப்படும்.
சிறுவர்களுக்கு வயிற்றில் வாயு நிறைந்தவாறு உப்பியவாறு காணப்படும்,பெரியவர்களுக்கு வயிறு வலி,மற்றும் வயிற்றோட்டம் போனற அறிகுறிகள் இருக்கும்.
அஜீரணம் ஏற்பட பல காரணங்கள் உள்ளது.காரமான உணவு உண்ணுதல்,சாப்பிட்டவுடன் உறங்குவது ,ஜீரணமாக கடினமான உணவுகள்,மன இறுக்கம்,புகையிலை மற்றும் மதுபான பாவனை ,அதிக எண்ணெயுள்ள உணவுகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுவதனால் இந்த பிரச்சினை ஏற்படும்.
ஜீரணத்திற்கான அறிகுறிகள்;
- வாய் குமட்டுதல்
- வாய் துர்நாற்றம்
- வயிற்று வலி
- நெஞ்செரிவு
- வாய் புளித்தல்
- வயிற்றுப்போக்கு
- பசியின்மை
- வாயு தொல்லை
- வயிறு உப்புசம்
இதனை தடுக்க என்ன செய்யலாம்?
உணவில் இஞ்சி சேர்த்துக்கொள்ளுதல் அல்லது இஞ்சி போட்ட தேநீர் அருந்துதல், இஞ்சியில் வலி மற்றும் அழற்சியை நீக்கும் தன்மை உள்ளது.
- எலுமிச்சை ஜூஸ் பருகுவதால் செரிமான போரச்சினைகள் நீங்குவதோடு வயிற்றுவலியை போக்கும்.
-
புதினா இலை வாய் துர்நாற்றம் நீக்கவல்லது,குடல் தசைகளை இலகுவாக்க உதவும்.வாய் குமட்டலை நீக்கும்.
-
பெருஞ்சீரகத்தை அப்படியே மென்று உண்ணுதல் செரிமானத்திற்கு உதவும்.அல்லது நீர் சேர்த்து சாப்பிடலாம்.
-
தேனும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயற்பட்டு செரிமானத்தை அதிகரிக்கும்,இதனை வெறுமனேயோ அல்லது நீர் சேர்த்தோ பருகலாம்.
- சமையல் சோடா வயிற்றில் உருவாகும் அமிலத்தன்மையை சமன் செய்ய உதவும்.இந்த பிரச்சினை உள்ளவர்கள் தினமும் ஒரு தேக்கரண்டி வெறுமனேயோ அல்லது தேன் கலந்து உண்ணலாம்.
இவை அனைத்தும் வீட்டிலுள்ள ஒரு பெரியார் சொல்லி கேட்டிருப்போம் அல்லது பாட்டிமார் சொல்லிக்கேட்டிருப்போம்.இவை பக்கவிளைவுகளற்ற பாட்டி வைத்தியமுறையாகும்.இவ்வாறான தவறான உணவுமுறை,பழக்கவழக்கங்களை மாற்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.