குடிபோதையில் இண்டிகோ விமானத்தில் ஊழியர்களிடம் தவறாக நடந்த 2 பயணிகள் கைது
குடிபோதையில் இண்டிகோ விமானத்தில் 2 பயணிகள் ஊழியர்களிடம் தவறாக நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்களிடம் தவறாக நடந்த 2 பயணிகள்
துபாயிலிருந்து மும்பை நோக்கி இண்டிகோ விமானம் வந்துக்கொண்டிருந்தது. அந்த வினமாத்தில் 2 பயணிகள் குடிபோதையில் ஊழியர்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. நேற்று துபாயில் இருந்து மும்பை நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அப்போது, பயணிகள் 2 பேர் நன்றாக குடித்துள்ளனர்.
அப்போது, இதை கவனித்த விமான ஊழியர்கள், விமானத்தின் உள்ளே மதுபானம் குடிக்க தடை செய்யப்பட்டுள்ள விவரத்மதை கூறினர்.
இதனால், ஆத்திரத்தில் இரண்டு பேரும், இருக்கைகளிலிருந்து எழுந்து, விமானத்தில் குடித்தபடியே நடந்து சென்றுள்ளனர். மேலும், விமான ஊழியர்களிடம் மற்றும் சக பயணிகளிடமும் தவறாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து, விமான நிறுவனம் போலீசில் புகார் கொடுத்தது. இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.
இது குறித்து, மும்பை துணை காவல் ஆணையாளர் தீட்சித் கெதம் கூறுகையில்,
பயணிகள் இருவரும் குடிபோதையில் ஊழியர்களிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 21, 22 மற்றும் 25-ன் கீழ் இண்டிகோ விமான பயணிகள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த சட்ட பிரிவுகளின்படி அவர்களுக்கு காவல் நிலையத்தில் ஜாமீன் கொடுக்கப்பட்டுவிட்டது என்றார்.