சிந்து நதி நீர் ஒப்பந்தம்... மறுபரிசீலனை செய்ய இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்

Pakistan Jammu And Kashmir
By Arbin May 15, 2025 06:30 AM GMT
Report

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி பாகிஸ்தான் இந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டிற்குள் நெருக்கடி

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகம் தனது எல்லைக்குள் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று டெல்லிக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்... மறுபரிசீலனை செய்ய இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான் | Indus Waters Treaty Pakistan Pleads

சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக பாகிஸ்தானுடன் நீடித்து வரும் ஒரு முக்கியமான நீர் பகிர்வு ஒப்பந்தமாகும். ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட மற்றொரு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, 1960ல் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திய நிலையில், பாகிஸ்தான் தற்போது கோரிக்கை வைத்துள்ளது.

இந்தியா, தனது தேசிய பாதுகாப்பு சிறப்புரிமையைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கான அதன் ஆதரவை நம்பகத்தன்மையுடன் நிறுத்தும் வரை ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது.

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது... விரிவான பின்னணி

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது... விரிவான பின்னணி

உலக வங்கியின் ஆதரவு ஒப்பந்தம் ஒன்றில் இந்தியா முதன்முறையாக இடைநிறுத்தம் செய்துள்ளது. இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், பாகிஸ்தான் அமைச்சகம் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது நாட்டிற்குள் நெருக்கடியைத் தூண்டும் என்று எச்சரித்துள்ளது.

இதனிடையே, சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு தனது முதல் உரையில், பிரதமர் நரேந்திர மோடி, அரசாங்கத்தின் சமரசமற்ற நிலைப்பாட்டை உறுதி செய்திருந்தார்.

தண்ணீரும் இரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது என்றும் பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒரே நேரத்தில் முன்னெடுக்க முடியாது என்றார்.

நட்பின் அடிப்படையில்

இந்த ஒப்பந்தத்தில் மூன்று மேற்கு ஆறுகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றை பாகிஸ்தான் பகிர்ந்துகொள்வதுடன், கிழக்கு ஆறுகளான சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகியவை இந்தியா பயன்படுத்தி வருகிறது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்... மறுபரிசீலனை செய்ய இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான் | Indus Waters Treaty Pakistan Pleads

இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வலுப்படுத்தியுள்ளார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது நல்லெண்ணம் மற்றும் நட்பின் அடிப்படையில் நிறுவப்பட்டது.

பாகிஸ்தான் பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதன் மூலம் இந்த மதிப்புகளை மிதித்து வருகிறது என்றார். 1960 ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதி அமைப்பால் கொண்டு செல்லப்படும் மொத்த நீரில் 30 சதவீதத்தை இந்தியாவும், எஞ்சியுள்ள 70 சதவீதத்தை பாகிஸ்தானும் பயன்படுத்தலாம்.

போர் நிறுத்த முடிவு... பாகிஸ்தான் மீது சீனாவிற்கு அதிருப்தியா? வெளிவரும் பின்னணி

போர் நிறுத்த முடிவு... பாகிஸ்தான் மீது சீனாவிற்கு அதிருப்தியா? வெளிவரும் பின்னணி

இதனிடையே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்ட நிலையில், நரேந்திர மோடி அரசாங்கம் நிறுத்தி வைத்திருக்கும் நீர்மின் திட்டங்களை முடிப்பதற்கு முக்கிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US