ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்ட விவகாரத்தில் சிசு உயிரிழப்பு
விரைவு ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட விவகாரத்தில் சிசு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிசு உயிரிழப்பு
கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது வேலூர் கே.வி. குப்பம் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு சிலர் அவரை வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து கத்திக் கூச்சலிட்டுள்ளார்.
அவரின் சத்தத்தைக் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் கர்ப்பிணி பெண்ணை அந்த நபர்கள் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர்.
இதையடுத்து, தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை பொலிஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில், தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்தது.
இந்நிலையில், பெண்ணின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |