பிரித்தானிய மருத்துவமனைகள் மீண்டும் ஸ்தம்பிக்கும்: எச்சரிக்கும் நிபுணர்கள்
பிரித்தானியாவில் நாளுக்கு 200,000 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகும் எனவும், அதில் 20,000 பேர்கள் மருத்துவமனையை நாடும் நிலை ஏற்படும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூலை 19 முதல் பிரித்தானியாவில் மொத்த கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளன. ஆனால், மருத்துவ நிபுணர்கள் தரப்பு இந்த முடிவை கடுமையாக எதிர்த்து வருகிறது.
கொரோனா பரவலின் துவக்க நாட்கள் போன்று மீண்டும் பரவல் துவங்கும் எனவும், பிரித்தானியாவில் மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த சில வாரங்களில் நாளுக்கு 100,000 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நிலை வரும் என்பது உறுதி என குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் Neil Ferguson. மட்டுமின்றி நாளுக்கு 2,000 பேர்கள் குறைந்தது மருத்துவமனையை நாடும் நிலை வரும் என்றார்.
கடந்த வாரத்தில் இருந்து சுமார் 70% தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள Neil Ferguson,
இதனால் குறிப்பிட்ட சிகிச்சைக்காக காத்திருக்கும் பிரித்தானியர்கள் மேலும் காத்திருக்கும் மிக மோசமான நிலைக்கு இது கொண்டு செல்லும் என்றார்.