மீண்டும் இதெல்லாம் அதிகரிக்கும்! பிரித்தானியா மக்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
ஊரடங்கு தளர்த்தப்படுவதால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் என்று பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
டவுனிங் தெருவில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது, இந்த முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானது ஊரடங்கு மட்டும் தான் காரணம் என்று நான் நினைக்கவில்லை.
நிச்சயமாக தடுப்பூசி திட்டம் உதவியது, ஆனால் நோயைக் குறைப்பதில் பெரும்பகுதி பணிகள் ஊரடங்கின் மூலம் தான் செய்யப்பட்டுள்ளன.
எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளத்துவதன் விளைவாக தவிர்க்க முடியாத நிலையில் மீண்டும் அதிக தொற்று, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகாரிப்பு மற்றும் அதிக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முன்மொழியப்பட்ட திட்டத்தை மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை.
இருப்பினும், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போரிஸ் ஜான்சன் வலியுறுத்தினார்.