‘இந்தியா என்றும் மறக்காது’ பிபின் ராவத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
இந்திய முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, தமிழ்நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இராணுவ வீரர்களை இழந்ததில் மிகவும் வேதனை அடைந்துள்ளேன்.
அவர்கள் மிகுந்த சிரத்தையுடன் நாட்டிற்கு சேவை செய்தனர்.
ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறந்த இராணுவ வீரர். ஒரு உண்மையான தேசபக்தரான அவர், ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு இயந்திரங்களை நவீனமயமாக்குவதில் பெரிதும் பங்களித்தார்.
போர்த்திறஞ்சார்ந்த விஷயங்களில் அவரது நுண்ணறிவு மற்றும் முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை. அவரது மறைவு என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் முதல் முப்படைத் தலைமை தளபதியாக பாதுகாப்பு சீர்திருத்தங்கள் உட்பட நமது ஆயுதப் படைகள் தொடர்பான பல்வேறு அம்சங்களில் அவர் பணியாற்றினார்.
Gen Bipin Rawat was an outstanding soldier. A true patriot, he greatly contributed to modernising our armed forces and security apparatus. His insights and perspectives on strategic matters were exceptional. His passing away has saddened me deeply. Om Shanti. pic.twitter.com/YOuQvFT7Et
— Narendra Modi (@narendramodi) December 8, 2021
இராணுவத்தில் சிறப்பாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது சிறப்பான சேவையை இந்தியா என்றும் மறக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.