Instant Coffee Mix: சூடான நீர் இருந்தால் போதும்..! செக்கனில் காபி செய்திடலாம்
பொதுவாகவே அனைவரும் காலையிலும் மாலையிலும் காபி குடிப்பது வழக்கம். அதற்கு உங்களுக்கு எப்போது வீட்டில் பாலும் காபி தூளும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஆனால் அது ஒரு சில சமயங்களில் இருப்பதில்லை. அதுப்போலவே நீங்கள் ஓர் காபி பிரியராக இருந்தால் எங்கு சென்றாலும் காபி குடித்துக்கொண்டே இருக்க நினைப்பீர்கள்.
ஆனால் அதுவும் தகுந்த நேரத்தில் கிடைப்பதில்லை. அதற்கு எல்லாம் தீர்வு தரும் வகையில் தான் இந்த Instant Coffee Mix காணப்படுகிறது.
நீங்கள் சூடான நீரை கொதிக்க வைத்து எடுத்தால் போதும். 1 செக்கனில் சுவையான காபியை செய்து குடித்திடலாம். இதை 3 அல்லது 4 மாதங்கள் வரை நீங்கள் சேர்த்து வைத்துக் பயன்படுத்தலாம். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
சர்க்கரை - அரை கப்
-
Instant காபி தூள் - அரை கப்
- பால் தூள் - 1 கப்
செய்முறை
-
முதலில் மிக்ஸியில் சர்க்கரை சேர்த்து தூளாக அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- பின் Instant காபி தூளை மிக்ஸியில் சேர்த்து தூளாக அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- அடுத்தாக ஓர் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து அதில் பால் தூளும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- இறுதியாக சூடான நீரில் அரைத்து வைத்துள்ள கலவையில் மூன்று தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்துக் குடிக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |