Instant Dosa: ஒரு கப் பொட்டுக்கடலை போதும்.., மொறுமொறு தோசை செய்யலாம்
தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.
அந்தவகையில், மாவு அரைக்காமலேயே 5 நிமிடத்தில் உடனடி மொறுமொறு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பொட்டுக்கடலை- 50g
- ரவை- 50g
- காய்ந்தமிளகாய்- 4
- இஞ்சி- சிறிய துண்டு
- சீரகம்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- தயிர்- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, ரவை, காய்ந்தமிளகாய், இஞ்சியை சேர்க்க வேண்டும்.
பின் அதில் சீரகம், தயிர் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்க்கவேண்டும்.
பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ரவா தோசை போன்று ஊற்றவும்.
இறுதியாக அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, வேக வைத்து எடுத்தால், சுவையான பொட்டுக்கடலை தோசை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |