நாவூறும் சுவையில் ஆனியன் ரவா தோசை.., 15 நிமிடத்தில் செய்யலாம்
தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.
அந்தவகையில், மாவு அரைக்காமலேயே 15 நிமிடத்தில் உடனடி மொறுமொறு ரவா தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரவை- 1 கப்
- அரிசி மாவு- 1 கப்
- மைதா மாவு- 2 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
- இஞ்சி- 1 துண்டு
- பச்சைமிளகாய்- 2
- சீரகம்- ½ ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 2 கொத்து
- உப்பு- தேவையான அளவு
- வெங்காயம்- 1
- கொத்தமல்லி- சிறிதளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, மைதா மாவு, தயிர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
அடுத்து அதில் துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம், மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின்னர் இதில் அதிகளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 20 நிமிடம் அப்படியே வைக்கவும்.
அடுத்து இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து தோசை மாவு போல் இல்லாமல் தண்ணீராக கரைத்துக்கொள்ளவும்.
இதற்குபின்னர் அடுப்பில் ஒரு தவா வைத்து நன்கு சூடானதும் அதில் கரைத்துவைத்த மாவை சேர்த்து அதன் மேல் கொத்தமல்லி மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
இறுதியாக தோசை நன்கு பொன்னிறமாக வெந்ததும் எடுத்தால் சுவையான ஆனியன் ரவா தோசை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |