இந்த விஷயத்தில் இந்திய அணியை நினைத்தால் பெருமையா இருக்கு! பாராட்டி தள்ளிய இன்ஜமாம் உல் ஹக்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இன்ஜமாம் உல் ஹக், இந்திய அணியை பாராட்டி தள்ளியுள்ளார்.
இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இதில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணியால், டி20 தொடரைக் கைப்பற்ற முடியவில்லை. டி20 தொடரின் இரண்டாவது போட்டி துவங்குவதற்குள், க்ருணல் பாண்ட்யா கொரோனாவால் பாதிக்கப்பட, அதைத் தொடர்ந்து, அவருடன் நெருக்கமாக இருந்த வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டதால், இந்திய அணியில் 9 வீரர்கள் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இருப்பினும், இந்திய அணி தங்களிடம் இருந்த வீரர்களை வைத்து விளையாடி தொடரை தோற்றது.
இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இன்ஜமாம் உல் ஹக் இது குறித்து கூறுகையில், இந்திய அணி இந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக 9 வீரர்கள் அணியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் பாதியிலேயே இந்த தொடரை முடித்துக் கொள்ளாமல் முழுத் தொடரையும் இந்திய அணி சந்தித்து விளையாடியிருக்கிறது.
இந்திய அணியின் இந்த போராட்ட குணம் பாராட்டக்கூடிய ஒன்று. இந்திய அணி நினைத்திருந்தால் இந்த தொடரே வேண்டாமென்று விலகி இருக்கலாம் ஆனால் இருக்கும் வீரர்களை வைத்து கடுமையாக போராடி தோல்வி அடைந்தது.
தோல்வியைக் கண்டு பயப்படாத அணியாக தற்போதுள்ள இந்திய அணி உள்ளது பாராட்டுக்குரியது. தோல்வியை கண்டு பயம் இல்லாமல் விளையாடினாலே வெற்றி நமக்கு வந்து சேரும் என்று கூறியுள்ளார்.