மொத்தம் 750 நாட்கள்... தனிமைப்படுத்தப்பட்ட பெண் வெளிப்படை
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் பெண் ஒருவர் 750 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் குடியிருப்பில் இருந்தே பணியாற்ற பணிக்கப்பட்டனர். இதனால் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என முக்கியமானவர்களை அடிக்கடி சந்திக்க முடியாமல் போனதுடன், நாளடைவில் அந்த இடைவெளியும் பல பேருக்கு அதிகரித்தது.
பெரும்பாலான மக்கள் தற்போது பூஸ்டர் தடுப்பூசியும் பெற்றுக்கொண்டு சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர். ஆனால், இன்னமும் பலபேர் தனிமைப்படுத்தலில் நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயோவா மாகாணத்தில் சாரா அன் வில்லெட் என்ற பெண்மணி தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து 750 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தலில் கழித்தார் என தெரிவித்துள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்படுவதால், அவரால் மிக எளிதாக கொரோனா பாதிப்பில் சிக்கும் ஆபத்து இருந்தது. கொரோனா பரவலுக்கு முன்னரே சாரா உடல் நலனில் மிகுந்த கவனம் செலுத்தி வந்துள்ளார்.
ஊரடங்கின் போது மாஸ்க் அணிந்து, அதிக கூட்டங்களை தவிர்த்து, தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல அவர் முடிவு செய்தார். வீட்டில் குடும்ப கூடுகை நிகழ்ச்சி என்றால் கூட, அதனால் ஏற்பட்ட ஒவ்வாமையால் நோய்வாய்ப்படும் ஆபத்தில் இருந்தார் சாரா.
இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கப்பட்டு, நாடு சகஜ நிலைக்கு திரும்பிய நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு அவரது கணவர் நேரில் வேலைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார்.
அவர்களின் பொருளாதார நிலை நலிவடைந்து வருவதே அதற்கு முதன்மை காரணமாக கூறுகின்றனர்.
750 நாட்கள் அல்ல, வாழ்க்கை முழுவதும் தனிமைப்படுத்திக்கொள்ள தம்மால் முடியும் என கூறும் சாரா, ஆனால் ஏழ்மை, பொருளாதார நெருக்கடியால் மரணமடைய விரும்பவில்லை என்கிறார் சாரா.