129 பந்துகளில் 312 ரன்கள்! அடுத்த டோனியா? இளம் வீரரை தட்டி தூக்க காத்திருக்கும் ஐபிஎல் அணிகள்
2022 ஐபிஎல் சீசனில் லவ்னித் ஷிசோடியா என்ற இளம் வீரரை தங்கள் அணிக்கு எடுத்துவிட வேண்டும் என ஐபிஎல் அணிகள் திட்டமிட்டு வருகின்றன.
ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் அடுத்த டோனியை ஐபிஎல் அணிகள் கண்டுபிடித்துள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த லவ்னித் ஷிசோடியா என்ற 21 வயதான வீரர் பி.சி.சி.ஐ. நடத்தும் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கான தொடரில் பங்கேற்று கலக்கியுள்ளார்.
அந்த தொடரில் பவர்பிளேவில் அவரது ஸ்டைரக் ரேட் 231 ஆகும் முச்சதம் இதே போன்று கார்ப்ரேட் கிரிக்கெட் ஒருநாள் தொடரில் பங்கேற்ற அவர் 129 பந்துகளில் 312 ரன்கள் விளாசியுள்ளார்.
இதனால் அவரை பற்றி அறிந்த ஐ.பி.எல். அணிகள், அவரது திறமையை பரிசோதிக்க அழைத்துள்ளது. இதில் மும்பை அணி, அவரை குறிவைத்துள்ளதாக தெரிகிறது, இதே போன்று லவ்னித் ஷிசோடியாவை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுக்க தீவிரமாக உள்ளது.
பஞ்சாப் அணி, அவரை அழைத்து பயிற்சி ஆட்டம் ஒன்றில் பங்கேற்க வைத்துள்ளது. அதில் லவ்னித் ஷிசோடியா 26 பந்துகளில் 66 ரன்கள் விளாசியுள்ளார்.
இதே போன்று டெல்லி அணியும் லவ்னித்தை அழைத்து அவரது திறமையை சோதித்துள்ளது. இதனால், ஐ.பி.எல். ஏலத்தில் லவ்னித்துக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.