2022 ஐபிஎல் தொடர் இலங்கையில் நடத்தப்படுமா? யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்... முக்கிய தகவல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த இலங்கை தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளின் 15வது சீசன் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான மெகா ஏலம் பிப்ரவிரி மாதம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவின் 3வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 2020 ஆம் ஆண்டை போல் ஐ.பி.எல். போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டது.
ஆனால் போட்டியை அங்கு நடத்துவதால் வீரர்கள் தங்கும் செலவு, உணவு செலவு போன்றவை இரு மடங்காக உயர்கிறது. இதையடுத்து இலங்கை அல்லது தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாமா என பிசிசிஐ யோசித்து வருகிறது.
இது தொடர்பில் பேசிய இலங்கை கிரிக்கெட் செயலாளர் மோகன் டி சில்வா, ஐபிஎல் 2022-ஐ இலங்கையில் நடத்துவது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும்.
தங்கள் நாட்டில் ஐபிஎல் நடத்துவதில் மகிழ்ச்சி. இலங்கையில் கோவிட் நிலைமை மோசமாக இல்லை என கூறியுள்ளார்.
மேலும் இலங்கையில் சர்வதேச தரத்தில் மைதானங்கள் இருப்பதோடு, வானிலையும் இந்தியாவை போல இருப்பதால் அங்கு ஐபிஎல் நடத்த ஏற்ற இடமாக இருக்கும் கூறப்படுகிறது.