ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை...இரண்டையும் ஒரே நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ள பிசிசிஐ? வெளியான தகவல்
இந்தியாவில் கொரோனா நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால், பிசிசிஐ ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடரை ஒரே நாட்டில் நடத்த முடிவு செய்திருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு, இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
அதன் பின் இந்தியாவில் நிலைமை சீராக, இந்தாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டது. ஆனால், கொரோனாவின் இரண்டாவது அலையால் இந்தியாவே கதிகலங்கி போயுள்ளதால், இந்த தொடரை பிசிசிஐ காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் தொடர் இந்தாண்டு நடத்த வாய்ப்பில்லாததால், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளை பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் முடிந்தவுடன், உலகக்கோப்பை டி20 தொடரையும் நடத்த வேண்டும் என்பதால், இவரை இரண்டையும் ஒரே நடத்த வேண்டும் என்பதற்காக பிசிசிஐ ஐக்கிய அரபு அமீரகத்தை தெரிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ஏ
னெனில், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர், மிகவும் பாதுகாப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்ததால், இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாகவும், இதன் அறிவிப்பு விரைவில் வரும் எனவும் கூறப்படுகிறது.