ஐபிஎல் ஏலத்தில் முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை! வெளியான விபரம்: ரசிகர்கள் ஷாக்
ஐபிஎல் ஏலத்தில் பெயர் கொடுக்காமல் விட்ட வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களும் இந்த ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.
அந்த வகையில், இந்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் சேர்கப்பட்டுள்ளதால், மொத்தம் 10 அணிகள் மோதவுள்ளன. இதற்கான ஏலம் பெங்களூரில் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 10 அணிகளுக்கும் பிசிசிஐ அனுப்பிய வீரர்கள் பட்டியலில் முக்கிய வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.
மிட்செல் ஸ்டார்க், சாம் கரண், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் கெயில், ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தங்கள் பெயரை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.