ஐபிஎல் தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டதால் பிசிசிஐ-க்கு இத்தனை கோடிகள் இழப்பா? வாய்பிளக்க வைக்கும் தகவல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிசிசிஐக்கு ரூ 2000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ம் திகதி தொடங்கி நடந்து வந்தது. கடந்த 24 நாட்களில் 29 லீக் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கொல்கத்தாவைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனால் வேறு வழியின்றி ஐபிஎல் தொடரை பிசிசிஐ நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
பாதியிலேயே ஐபிஎல் தொடர் ஒத்தி வைப்பால் பிசிசிஐக்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேரடி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. 5 ஆண்டு ஒளிபரப்பு உரிமத்தை 16347 கோடிக்கு பெற்றுள்ளது. ஆண்டுக்கு 3269.4 கோடி ரூபாய். ஒரு சீசனில் 60 போட்டிகளும் நடந்தால் ஒரு போட்டிக்கு 54.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
தற்போது அதில் இழப்பு ஏற்பட்டுள்ளது. 29 போட்டிகள் மூலம் 1580 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
மீதமுள்ள போட்டிகள் நடத்தப்படாமல் போனால் 1690 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். இதே போல டைட்டில் ஸ்பான்சர், பிற ஸ்பான்சர்களாலும் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.