முதல் போட்டியிலே இப்படி கெட்டவார்த்தையா பேசுறது? பஞ்சாப்-ராஜஸ்தான் போட்டியில் நடந்த சர்ச்சை
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான சேட்டன் ஷக்கரியா தனது முதல் போட்டியிலே சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. அந்த வகையில், பஞ்சாப் அணிக்கு கே.எல் ராகுலும், மாயன்க் அகர்வாலும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
கடந்த தொடரில் பஞ்சாப் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த மாயன்க் அகர்வால் இந்த தொடரையும் சிறப்பாக துவங்குவார் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில், மாயன்க் அகர்வாலோ 9 பந்துகளில் 14 ஓட்டங்கள் எடுத்த போது சேட்டன் சக்கரியாவின் பந்துவீச்சில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
மாயன்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் அரங்கில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்த சேட்டன் சக்கரியா, தனது மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக ஆக்ரோஷமாக கத்தினார்.
ஆக்ரோஷமாக கத்துகையில் ஒரு சில கெட்ட வார்த்தைகளையும் சேட்டன் சக்கரியா உபயோகித்துள்ளார்.
இது வீடியோவில் பதிவாகியுள்ளதால், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.