பாதியில் ரத்தான இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி எப்போது நடக்கும்? முக்கிய தகவல்
இந்தியாவில் பாதியில் ரத்தான ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி மீண்டும் துவக்க, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்த சீசனில் எஞ்சிய 31 போட்டிகளை தள்ளிவைப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.
அதைத் தொடர்ந்து துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் அந்த போட்டிகளை நடத்த பிசிசிஐ மற்றும் அமீரக கிரிக்கெட் கிரிக்கெட் வாரியம் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தன.
அதில் இந்த முடிவு எட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி மீண்டும் ஐபிஎல் போட்டிகள் பாதியில் இருந்து துவக்கப்படலாம் என தெரிகிறது.
ஐபிஎல்லின் இறுதி போட்டி அக்டோபர் மாதம் 15ஆம் திகதி நடக்கும் என கூறப்படுகிறது.