இது மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது... அமெரிக்காவைக் கடுமையாகச் சாடிய ஈரான் பயிற்சியாளர்
தனது அணியை மிகவும் நியாயமற்ற முறையில் நடத்தியதாகத் தெரிவித்து, ஃபிஃபாவின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ அமெரிக்காவை கேள்வி கேட்க வேண்டும் என்று ஈரானின் தலைமைப் பயிற்சியாளர் அமீர் கலெனோய் கூறியுள்ளார்.
ஏமாற்றம்
அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக அமைந்தால், ஈரான் முதல் முறையாக உலகக் கிண்ணம் தொடரில் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும்.

ஆனால், சியாட்டிலில் எகிப்துக்கு எதிராக நடந்த பரபரப்பான சமன் ஆட்டத்திற்குப் பிறகு, அதில் கூடுதல் நேரத்தில் ஷோஜா கலீல்சாதே அடித்த வெற்றி கோல் ஆஃப்சைடு என நிராகரிக்கப்பட்டதாலும்,
சயீத் எஸதோலா தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில் பட்டதாலும், ஈரான் அணி வெறும் முடிவு மட்டுமல்லாமல் வேறு பல விடயங்களாலும் ஏமாற்றமடைந்தனர்.
நியூசிலாந்துக்கு எதிரான குரூப் ஜி தொடக்க ஆட்டத்திற்குப் பிறகு இன்ஃபான்டினோ ஈரானின் உடை மாற்றும் அறைக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், நீங்கள் எல்லாவற்றையும் விட வலிமையானவர்கள் என பாராட்டினார்.
ஆனால், இன்ஃபான்டினோ ஈரான் அணிக்கு உதவ தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார் என்று கலெனோய் கூறிவரும் வேளையில், போட்டித்தொடர் தொடங்கியதிலிருந்து பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
அனுமதிக்க வேண்டாம்
இந்த நிலையிலேயே, உலகக் கிண்ணம் தொடரில் ஈரான் அணிதான் மிகவும் ஒடுக்கப்பட்ட அணி என தலைமைப் பயிற்சியாளர் தனது ஏமாற்றத்தைப் பதிவு செய்தார்.

இன்ஃபான்டினோ தங்களுக்கு உதவ முன்வந்தாலும், தொடரை இணைந்து நடத்தும் நாடுகள், தங்களை மிகவும் நியாயமற்ற முறையில் நடத்துவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் போட்டிகளை நடத்தும் நாடுகள், அணிகளையும் வீரர்களையும் இதேபோல் நடத்த அனுமதிக்க வேண்டாம் என்று ஃபிஃபாவை கேட்டுக்கொள்கிறேன். இன்ஃபான்டினோ இதுபோன்ற நடத்தைக்கு எதிராகக் குரல் கொடுப்பார் என்று நம்புகிறேன் எனவும் அமீர் கலெனோய் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |