டிரம்ப், பாம்பியோவுக்கு இலக்கு... ஈரானின் பழிக்குப்பழி சதித்திட்டம் அம்பலம்
அமெரிக்காவின் முன்னாள் உயர்மட்ட அதிகாரிகளை படுகொலை செய்ய ஈரான் சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறையின் புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
ஈரான் தளபதி காசிம் சுலைமானியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ட்ரோன் தாக்குதலில் அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ஜோ பைடன் தமது மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்றுப்பயணம் தொடர்பில் அறிவிப்பு வெளியாவதற்கும் இரண்டு நாட்கள் முன்னர், குறித்த உளவுத்துறை அறிக்கையானது வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி பொறுப்புக்கு வந்த பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தமது முதல் பயணத்தை ஜோ பைடன் முன்னெடுக்க உள்ளார். வெளியான அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பிற அதிகாரிகளை முக்கிய இலக்காக ஈரான் குறிப்பிட்டுள்ளது.
2020 ஜனவரியில் பாக்தாதில் நடந்த இந்த தாக்குதல் தொடர்பில் அப்போதே ஈரான் மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால் புதிய அறிக்கை வெளியான நிலையில் அமெரிக்க அதிகாரிகள் அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி, 2021 ஜனவரிக்கு பின்னர் அமெரிக்காவிற்குள் கொடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விருப்பத்தை ஈரான் பகிரங்கமாகவே வெளிப்படுத்தி வந்துள்ளது. மேலும் ஈரானின் முதன்மை இலக்காக ட்ரம்ப் மற்றும் மைக் பாம்பியோ இடம்பெற்றிருந்தனர்.
மட்டுமின்றி, தளபதி காசிம் சுலைமானியின் பதவிக்கும் தகுதிக்கும் ஏற்ப ஒருவரையே பழிவாங்க வேண்டும் என ஈரான் குறிவைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.