லண்டனில் கத்திகுத்துக்கு ஆளான ஈரானிய ஊடகவியலாளரின் தற்போதைய நிலை
இங்கிலாந்தில் கத்திகுத்துக்கு ஆளான ஈரான் தொகுப்பாளர் Pouria Zeraati தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி தொகுப்பாளர்
ஈரானைச் சேர்ந்த சர்வதேச தொலைக்காட்சி தொகுப்பாளர் Pouria Zeraati (36). இவர் தெற்கு லண்டனில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்.
விம்பிள்டன் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே, Pouria ஒரு குழுவினரின் தாக்குதலில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய Pouria மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இச்சம்பவம் தொடர்பில், பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுதொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான இடத்தில்
இந்த நிலையில் Pouria மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தனது நிலை குறித்து Pouria Zeraati கூறுகையில், ''கடந்த சில நாட்களில் அனுதாபம், இரக்கம் மற்றும் அன்புக்கும் எனது நலம் விரும்பிகளுக்கு நன்றி. நான் அதிர்ஷ்டவசமாக நன்றாக உணர்கிறேன், குணமடைந்து வருகிறேன், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |