ஈரான் போரால் சூப்பர் பவரான தங்கம்- இந்தியா, பிரித்தானியாவை விட பெரிய பொருளாதாரம்
ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக கருதப்படும் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதன் விளைவாக, தங்கத்தின் சந்தை மதிப்பு 30 முதல் 35 டிரில்லியன் வரை உயர்ந்துள்ளது.
இது இந்தியா மற்றும் பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம்.
அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலளித்த ஈரான், மத்திய கிழக்கில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியது. இதனால் உலக சந்தைகளில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டன.

இதனால், முதலீட்டாளர்கள் பங்குகள் மற்றும் பிற சொத்துகளை விட்டு விலகி தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.
சர்வதேச தங்க விலை அவுன்ஸுக்கு 5,400 முதல் 5,600 டொலர் வரை உயர்ந்துள்ளது.
கடந்த 13 ஆண்டுகளாக நிலைத்திருந்த விலை அடிப்படையை உடைத்து, தங்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
1972 மற்றும் 2005-இல் நடந்த நீண்டகால உயர்வுகளைப் போல, இந்த உயர்வும் பல ஆண்டுகள் நீடிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பால், உலகளவில் financial superpower-ஆக உருவாகியுள்ளது. அரசியல் அபாயங்கள் அதிகரிக்கும் போது, தங்கம் மிகப்பெரிய செல்வச் சேமிப்பாக மாறுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |