சட்டவிரோத ஏஜென்சிகளை நாட வேண்டாம்! இந்தியர்களுக்கு ஈரான் எச்சரிக்கை
சட்டவிரோத ஏஜென்சிகளை நாட வேண்டாம் என இந்திய்ர்களுக்கு ஈரான் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.
கடத்தப்பட்ட மூன்று இந்தியர்கள்
ஈரானில் மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டவிரோத வழிகள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு எதிராக ஈரான் அரசு இந்தியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பஞ்சாப்பைச் சேர்ந்த ஹுசன்ப்ரீத் சிங், ஜஸ்பல் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் ஆகிய மூன்று பேரும் உள்ளூர் ஏஜென்ட் ஒருவர் மூலம் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தனர்.
துபாய் மற்றும் ஈரான் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதாக அந்த ஏஜென்ட் உறுதி அளித்திருந்துள்ளது.
ஆனால், இந்த மாதம் 1ஆம் தேதி ஈரான் சென்றதும், மூவரையும் ஒரு கும்பல் கடத்தி, அவர்களது குடும்பத்தினரிடம் 1 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.
கடத்தப்பட்டவர்களின் கைகள் கட்டப்பட்டு, உடலில் காயங்கள் இருக்கும் படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர்களது குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்தியர்களுக்கு ஈரான் எச்சரிக்கை
கடத்தப்பட்டவர்கள் சில நாட்களுக்கு மட்டுமே குடும்பத்தினருடன் பேசியுள்ளனர். கடந்த 11ஆம் திததிக்குப் பிறகு அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.
இந்த விவகாரம் இந்திய தூதரகம் மூலம் ஈரான் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் ஈரான் அரசு, சட்டவிரோத ஏஜென்சிகள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்வதால் ஏற்படும் பெரும் அபாயங்களைச் சுட்டிக்காட்டி, இந்தியக் குடிமக்கள் அங்கீகரிக்கப்படாத முகமைகளைத் தவிர்ப்பது நல்லது என வலியுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |