ஈரானின் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டவர்கள் குறித்த சமீபத்திய தகவல்
ஈரானின் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் விடுவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
30 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பிரான்ஸ் குடிமக்களான Cecile Kohler மற்றும் Chuck Paris என்னும் தம்பதியர் ஈரானுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், 2022ஆம் ஆண்டு ஈரான் அரசால் கைது செய்யப்பட்டார்கள்.
பிரான்ஸ் உளவுத்துறைக்காக வேலை பார்த்ததாகவும், இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட அவர்களுக்கு ஆளுக்கு 30 ஆண்டுகளுக்கு மேல், அதாவது, இருவருக்குமாக மொத்தம் 63 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் நீதித்துறை தெரிவித்திருந்தது.
சமீபத்திய தகவல்
இந்நிலையில், அவர்கள் இருவரும் விரைவில் விடுவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, பிரான்சில் வாழ்ந்துவந்த ஈரான் மாணவியான Mahdieh Esfandiari என்பவர் இஸ்ரேலுக்கெதிராக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
பிரான்சில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டவர்களை விடுதலை செய்ய பிரான்சுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஈரான் பிரான்ஸ் நாட்டவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக ஏற்கனவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஈரானில் சிறையிலிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்களை விடுதலை செய்ய ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, ஈரான் நாட்டவர்களை பிரான்ஸ் கைது செய்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியிருந்தது.
பிரான்சின் குற்றச்சாட்டை உறுதி செய்வதுபோலவே, தற்போது ஈரான் மாணவியான Mahdieh Esfandiariஐ பிரான்ஸ் விடுவிக்கத் தயாராகிவருவதாகவும், பதிலுக்கு ஈரானில் சிறையிலிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்களை ஈரான் விடுவிக்க இருப்பதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அப்படி ஈரான் விடுவிக்க இருக்கும் பிரான்ஸ் நாட்டவர்கள் Cecile Kohler மற்றும் Chuck Paris என கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |