மன உறுதியும், விடாமுயற்சியும் எப்போதும் பலனளிக்கும்! மீண்டும் டெஸ்டில் ஷர்துல் - முன்னாள் வீரர் வாழ்த்து
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தெரிவான ஷர்துல் தாகூருக்கு முன்னாள் வீரரான இர்பான் பதான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஷர்துல் தாகூர்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான அணி இன்று அறிவிக்கப்பட்டது.
சுப்மன் கில் தலைமை தாங்கும் இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர் ஆகிய முக்கிய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களில் ஷர்துல் தாகூர் (Shardul Thakur) கடைசியாக 2023ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடியிருந்தார். அதன் பின்னர் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இர்பான் பதான் வாழ்த்து
இதனை குறிப்பிட்டு முன்னாள் வீரரான இர்பான் பதான் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"ஷர்துல் தாகூர், உங்களுக்கு மிகவும் தகுதியானது! உள்ளூர் கிரிக்கெட்டில் கடுமையாகப் போராடி மீண்டும் அணியில் இடம் பிடித்தேன். மன உறுதியும், விடாமுயற்சியும் எப்போதும் பலனளிக்கும்" என கூறியுள்ளார்.
33 வயதாகும் ஷர்துல் தாகூர் 11 டெஸ்ட்களில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 7/61 ஆகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |