மருமகள் கேட் மிடில்டனால் எரிச்சலடைந்த மன்னர் சார்லஸ்! காரணம் இதுதான்... வெளியான புதிய தகவல்கள்
கேட் தன்னை விட அதிக ஊடக கவனம் பெற்றதால் எரிச்சலடைந்த சார்லஸ்.
எழுத்தாளர் Katie Nicholl எழுதியுள்ள The New Royals புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்.
கேட் மிடில்டன் அதிகளவில் ஊடகம் மற்றும் மக்களின் கவனத்தை பெற்றதை சார்லஸ் விரும்பவில்லை என தெரியவந்துள்ளது. எழுத்தாளர் Katie Nicholl எழுதியுள்ள The New Royals என்ற புத்தகத்தில் தான் இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தனது மருமகள் கேட் மிகவும் ஸ்டைலாக இருப்பதற்காக எவ்வளவு கவனத்தைப் பெற்றார் என்பதை சார்லஸ் அந்தளவுக்கு விரும்பவில்லையாம்.
ஏன் இப்படி என்ற கேள்வி பலருக்கும் எழலாம்? ஏனெனில் டயானாவுடன் வாழும் போதும் அவர் மீது தான் ஊடகம் மற்றும் மக்களின் கவனம் அதிகம் இருந்ததை சார்லஸ் அறிந்திருந்தார். பிற்காலத்தில் அதே போல கேட் தன்னை முந்தி பலரின் கவனத்தை ஈர்ப்பது உண்மையில் சார்லஸை எரிச்சலடைய செய்ததாக Katie Nicholl குறிப்பிட்டுள்ளார்.
getty images
ஆரம்ப காலக்கட்டத்தில் தான் சார்லஸ் இவ்வாறு இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கேட் அரச குடும்பத்திற்குள் நுழைந்த போது தாம் மீண்டும் பலரால் கவனிக்கப்படாமல் இருந்ததையும், அந்த கவனத்தை தனது மருமகள் கேட் பெற்றதையும் சார்லஸ் தொடர்ந்து உணர்ந்திருக்கிறார்.
சில சமயங்களில் கேட்டின் ஆடைகள் தான் செய்யும் நல்ல பணிகளை விட அதிக ஊடக கவனத்தைப் பெற்றதும் சார்லஸை எரிச்சலடைய வைத்தது என அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
Shutterstock