காளான் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
காளான் என்பது மண்ணில் வளரும் ஒரு பூஞ்சைத் தாவரமாகும். உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பி சாப்பிடப்படும் உணவான காளான் எல்லா வித சூழ்நிலைகளிலும் வளரக் கூடிய ஒரு தாவரமாகும். காளான்களில் பல்வேறு வகைகள் உள்ளன.
ஆனால் அவற்றில் ஒரு சில மட்டுமே சாப்பிடுவதற்கு உகந்தது ஆகும். பல காளான்கள் நச்சு தன்மை கொண்டவையாக உள்ளன. முக்கியமாக மூன்று வகையானயான காளான்கள் மட்டுமே சாப்பிடப்படுகின்றன.
அவை மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் போன்றவை ஆகும்.
இதில் ஒவ்வொரு காளானும் பல்வேறு சிறப்பான பயன்களைத் அள்ளி தருகின்றது.
அந்தவகையில் காளான் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- காளானில் உள்ள நார்ச்சத்து நாள்பட்ட நோய்களை குணப்படுத்துவதற்கு உதவுகிறது. டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. வாரத்திற்கு இரண்டு முறையாவது காளான்களை உட்கொண்டால் ரத்தம் மற்றும் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
- காளான்களில் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்திருப்பதால் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்வது நல்லது. ஏனெனில் இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோயை தடுக்க உதவும்.
- காளான்களில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். மற்றும் இதய நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ள வழிவகுக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்த பாதிப்பில் இருந்து விடுபடவும் துணைபுரியும்.
- தாயின் வயிற்றில் வளரும் கருவின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்-சேய் இருவரும் உடலளவில் வலிமையாக இருக்கவும் கர்ப்ப காலத்தில் போலிக் அமிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் தேவையை பூர்த்தி செய்யும் தன்மை காளானுக்கு இருக்கிறது. ஆதலால் கர்ப்ப காலத்தில் காளானை தவறாமல் சாப்பிடலாம்.