சொந்த நாட்டை விட ஐபிஎல் தொடர் முக்கியமா போச்சோ? சிந்திக்க வேண்டிய நேரம் என சயித் அப்ரிடி கோபம்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கலந்து கொள்ளாமல், தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பலர் ஐபிஎல் தொடருக்காக இந்தியா சென்றதால், அப்ரிடி விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் இரண்டு போட்டியில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்று சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது,
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்கள் குவிக்க, அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 292 ஓட்டங்கள் எடுத்து 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா அணியின் தோல்விக்கு முக்கிய காரணம், அந்தணியின் முக்கிய வீரர்களான காகிசோ ரபடா, குவின்டன் டி காக், அன்ரிக் நோர்க்கியா, டேவிட் மில்லர், லுங்கி நெகிடி ஆகியோர் மூன்றாவது போட்டியில் பங்கேற்காமல், ஏப்ரல் 9ஆம் தேதி (நாளை) துவங்கவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தென்னிராப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் இந்தியா சென்றனர்.
இதனால் வலுவிழந்த தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிக்காக போரடியது.
இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயித் அப்ரிடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடிய தென்னாப்பிரிக்கா வீரர்களை, தொடரின் நடுப்பகுதியில் ஐபிஎல் விளையாட அனுப்பி வைத்தது ஆச்சரியமாக உள்ளது.
டி20 லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட் தொடர்களைப் பாதிப்பதைப் பார்க்கும்போது கவலையாக உள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
Surprising to see @OfficialCSA allowing players to travel for IPL in the middle of a series. It is sad to see T20 leagues influencing international cricket. Some rethinking needs to be done!! https://t.co/5McUzFuo8R
— Shahid Afridi (@SAfridiOfficial) April 7, 2021
