நீங்க காளான் விரும்பி சாப்பிடுபவரா? எச்சரிக்கையாக இருங்க.. அதிகம் சாப்பிட்டால் இந்த பிரச்சினையை ஏற்படுத்திவிடுமாம்!
பொதுவாக காளானில் நாய்க் குடைக் காளான், முட்டைக் காளான், சிப்பிக் காளான், பால் காளான், பூஞ்சைக் காளான் என பல வகைகள் உள்ளன.
இருப்பினும் இதில் முக்கியமாக மூன்று வகையானயான காளான்கள் மட்டுமே சாப்பிடப்படுகின்றன. மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் போன்றவை இதில் அடங்கும்.
காளானில் பொட்டாசியம், கால்சியம், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஆகியவை அதிகம் காணப்படுகிறது.
பல வகையான் நன்மைகள் காளான் கொண்டிருந்தாலும் இதனை அதிகம் எடுத்து கொள்வது உடலுக்கு பக்கவிளைவுகளே ஏற்படுத்தும். அவற்றை தெரிந்து வைத்து கொள்வது அவசியமானதாகும்.
அந்தவகையில் தற்போது காளான் சாப்பிடுவதனால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
- காளான் சாப்பிடுவது சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். மேலும் சோர்வு ஏற்படலாம்.
- குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, செரிமானம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகள் ஏற்படலாம்.
- காளான் சாப்பிட ஒரு சிலருக்கு போதை உட்கொண்டதுபோன்ற நிலை உருவாக்கும். அரை மணி நேரத்தில் அவர்கள் இந்த நிலையை அடையலாம், வயிற்றில் ஒருவித சத்தமும் கேட்கலாம். மறதியுடன் தன்னிலை மறந்து கவனமின்றி இருக்கலாம்.
- சரும ஒவ்வாமை, தோல் பிரச்னைகள் ஏற்படலாம். சிலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் ஒழுகுதல், மூக்கு, தொண்டை வறண்டு போதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
- காளான் சாப்பிட 20 முதல் 30 நிமிடங்களில் சிலர் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கும். பின்னர், உடல் முழுவதும் ஒருவித கூச்ச உணர்வை அனுபவிக்கிறார்கள் சிறிது நேரம் கழித்து மனச்சோர்வு ஏற்படலாம்.
- சிலருக்கு காளான்கள் தோல் வெடிப்பு மற்றும் தோல் எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன.
- குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காளான் சாப்பிடும்போது மயக்கம் கூட ஏற்படலாம். எனவே இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.