மூன்று நாட்களில் நுரையீரல் எளிய முறையில் சுத்தம் செய்வது செய்யனுமா? இவற்றை செய்தாலே போதும்
பொதுவாக நம் உடலில் உள்ள வாயு பரிமாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு உறுப்பாக நுரையீரல் உள்ளது. இது மூக்கின் வழியாக வரும் காற்றை உள்ளிழுத்து ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு பிரித்து பிறகு கார்பன்-டை-ஆக்சைடை வெளியே அனுப்பும் மிக முக்கிய பணியை செய்து செய்கிறது.
இன்றைய நவீன உலகில் வாகனம் மாசு மற்றும் பிற மாசுக்களால் நாம் செல்லும் இடமெல்லாம் நம்மை அறியாமலே நாம் சுவாசிக்கும் போத காற்றுடன் தூசுக்கள் நம் நுரையீரலில் சென்றடைந்து விடுகிறது. இதனால் நுரையீரல் பெரிதும் பாதிப்புக்குள்ளாகுகின்றது.
இதனை எளியமுறையில் போக்க முடியும். அந்தவகையில் நுரையீரலை மூன்று நாட்களில் சுத்தம் எப்படி சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
- உடலிருந்து நச்சுகளை நீக்க வேண்டியது அவசியம். சுத்தம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும்.
- முதல் நாள் இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும்.
- ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான கிரேப் புரூட் சாற்றை குடிக்கவும். இதன் சுவை பிடிக்காவிட்டால் கிரேப் புரூட் சாற்றுக்கு பதிலாக பைனாப்பிள் சாற்றை குடிக்கலாம். எல்லாம் சுத்தமான தண்ணீர், சர்க்கரை கலக்காத சாறாக இருக்கட்டும்.
- மதிய உணவிறக்கு முன்பாக 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றை பருகவும். இதில் தண்ணீரோ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது. கேரட் சாறு சுத்தம் செய்யும் மூன்று நாட்களும் இரத்தத்தை அமில நிலையிலிருந்து காரத்தன்மைக்கு மாற்றுகிறது.
- இரவு படுக்கபோகும் முன்பு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த கிரேன்பெரி போன்ற சாற்றை குடிக்க வேண்டும். பொட்டாசியம் சுத்தம் செய்ய ஒரு டானிக்காக உதவுகிறது. இது உடலின் உள்ளுறுப்புகளில் முக்கியமாக சிறுநீர்பாதை, நுரையீரல் தொற்றுகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்குகின்றது. இதற்கு பதிலாக சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள், ஆரஞ்சு சாற்றை குடிக்கலாம்.
- இதை மூன்று நாட்கள் கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிடவேண்டும். குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வேர்வையை வெளியேற்ற உதவும். அல்லது 20 நிமிடங்களில் சுடுதண்ணீரில் குளிக்கலாம். வியர்வை வெளியேறும்போது நச்சுகளும் வெளியேறும்.
- இரவில் கொதிநீர் ஆவி பிடிக்கவேண்டும். 5 முதல் 10 சொட்டுவரை யூகாலிப்ட்டஸ் ஆயில் கொதிநீரில் சேர்த்து தலையினை சுத்தமான போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிப்பது நல்லது.
- மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிப்பதால் ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கும் நல்ல பலனை அளிக்கும்.