சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வெந்தய விதைகள் உதவுகின்றதா?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும் குணங்கள் சில உணவுகளுக்கு உண்டு.
அதில் வெந்தய விதைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க பெரிதும் உதவுகிறது.
வெந்தய விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மெதுவாக்குகிறது. கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை சத்தை குறைக்கவும் உதவுகிறது.
அந்தவகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தய விதைகளை எப்படி உதவுகின்றது என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
எப்படி உதவுகின்றது?
வெந்தய விதைகளில் நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை சத்தை உறிஞ்ச உதவுகிறது. இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது.
குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. இது கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. வெந்தயம் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு கொழுப்பை குறைக்க உதவுகிறது.
டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் உணவில் 15 கிராம் வெந்தய பொடியை சேர்ப்பது உணவுக்கு பிறகு ஏற்படும் குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது.
எவ்வளவு எடுத்து கொள்ளலாம்?
நீரிழிவு நோயின் தீவிரம், நோயாளியின் வயது மற்றும் உடல் நிலையை பொருத்து வெந்தயத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவு 2.5 கிராம் முதல் 15 கிராம் வரை இருக்கும்.
12.5 கிராம் வெந்தயப் பொடியை எடுத்து வருவது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது.
பக்கவிளைவுகள் உண்டா?
- வெந்தய விதைகளை பச்சையாக எடுத்துக் கொள்வது உங்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தலாம்.
- வெந்தய விதைகளை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும் போது வாயு வீக்கம் ஏற்படலாம்.
- இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளுடன் வெந்தய விதைகள் வினைபுரிய வாய்ப்பு உள்ளது.
குறிப்பு
விதைகளை எடுத்துவந்தால் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புண்டு. அதனால் மருத்துவரின் ஆலோசனையில் எடுத்துகொள்வதோடு அவ்வபோது சர்க்கரை அளவை பரிசோதிப்பதும் நல்லது.