அமெரிக்க மால்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க ஐ எஸ் அமைப்பு திட்டம்... அமெரிக்க மாகாணம் ஒன்றில் பொலிசார் குவிப்பு
அமெரிக்காவிலுள்ள விர்ஜினியா மாகாணத்திலுள்ள மால்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை வெடிவைத்துத் தகர்க்க ஐ எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவலளித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அலப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் ரோந்து செல்வதையும் அதிகரித்துள்ளார்கள்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஐ எஸ் அமைப்பு தனி நபர் தாக்குதல்களை திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக உளவுத்துறை அதிகாரியான John Cohen என்பவர் தெரிவித்துள்ளார்.
ஹாலோவீன் பண்டிகைக் காலமானதால் வார இறுதி மற்றும் செவ்வாய்க்கிழமை வரை பொலிசார் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாயன்று விர்ஜினியாவில் கவர்னர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு அச்சுறுத்தல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.