Tampon மாதவிடாய் நாளில் பயன்படுவது பாதுகாப்பானதா? பெண்களே கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Tampon என்பது மாதவிடாய் உதிரபோக்கை உறிஞ்சுக்கொள்ளும் நாப்கினுக்கு மாற்றான ஒன்றாக கருதப்படுகின்றது.
இது சானிட்டரி நாப்கின்களை விட டேம்பனை பயன்படுத்துவது எளிதாகவும் வசதியாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அந்தவகையில் இதனை எப்படி பயன்படுத்துவது என்று சில பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லை. இதனை நாம் முழுமையாக இப்போது தெரிந்து கொள்வோம்.
பயன்படுத்தும் முறை
- டேம்பன் என்பது விரல் போன்று இருக்கும் . மாதவிடாய் காலங்களில் இதை பெண் உறுப்பு வழியாக கருப்பைக்குள் செருகினால் போதும்.
- டேம்பனை பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் உங்கள் கைகளை சுத்தமாக கழுவி விடவும்.
- வெளியே எடுக்கும் போது டேம்பனுடன் இணைக்கப்பட்ட ஒரு நூல் போன்ற பகுதியை பிடித்து வெளியே எடுக்க வேண்டும்.
- ஒரு முறை பயன்பாட்டுக்கு பிறகு அதை அப்புறப்படுத்திவிட வேண்டும்.
- ஒவ்வொரு 4 முதல் 8 மணி நேரத்துக்குள் நீங்கள் டேம்பனை மாற்றிவிட வேண்டும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
8 மணி நேரம் மேல் தொடர்ந்து டேம்பன் பயன்படுத்தினால் அவை மோசமான தொற்றை உண்டு செய்யலாம். ஏனெனில் அதன் உறிஞ்சும் தன்மை அதிகமாக இருக்கலாம் இதனால் உங்களுக்கு காய்ச்சல் அல்லது பிற அசாதாரண அறிகுறிகள் உண்டாகலாம்.
-
டேம்பனை செருகும் போது அசாதாரண வெளியேற்றம், அணிய முயற்சிக்கும் போது வலி போன்ற பிற அறிகுறிகள் இருந்தால் நிறுத்திவிட்ட வேண்டும்.
- உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் டேம்பன்களை நிறுத்திவிட்டு உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
-
டேம்பன் பயன்படுத்திய பிறகு உங்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் அல்லது தலைச்சுற்றல் போன்ற உணர்வு, வெயிலில் எரிவது போல் தோன்றினால் இதனை தவிர்க்க வேண்டும்.
- உங்கள் மாதவிடாயின் போது அல்லது மாதவிடாய் முடிந்த உடனே இந்த அறிகுறிகள் இருந்தால் டேம்பனை தவிர்த்து மருத்துவரை அணுகுவது நல்லது.
பக்கவிளைவுகள் உண்டா?
- டேம்பன் நச்சு அதிர்ச்சி நோய்க்குறி -Toxic shock syndrome (TSS) உண்டாக்கலாம். இது அரிதானது.
- சில வகையான பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் நச்சுப்பொருளால் ஏற்படுகிறது. பாக்டீரியாவால் உண்டாகும் இந்த நிலை சிறுநீரகம், இதயம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு உட்பட அதிர்ச்சி மற்றும் மரணம் வரை உண்டு செய்யலாம்.