டெங்கு காய்ச்சல் மட்டுமல்ல... பப்பாளி இலைச்சாறு இத்தனை நோய்களுக்கு மருந்தாகுமா?
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு பப்பாளி இலைச்சாறு கொடுத்து சிகிச்சையளிக்கப்படுகிறது, காரணம் ரத்தத்தில் உள்ள ரத்த தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதே.
டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் அல்லது உட்படாதவர்கள்
இரத்தத்திலுள்ள இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் போது
இரத்தக் கசிவை நிறுத்த முடியாத நிலை ஏற்படும்.
இந்நிலையில் உள்ளுறுப்புகளிலிருந்தும் தோலுக்கு அடியிலிருந்தும் இரத்தக் கசிவுகள் வெளியாகும்.
அது போல பல் துலக்கும் வேலைகளில் ஈறுகளிலிருந்து இரத்தம் கசியும், ஆனால் இரத்த கசிவு நிற்பது கடினமாகும்.
அதேவேளை இரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைந்தால் மாதவிடாய் இரத்த போக்கும் அதிகரிப்பதோடு உடல் சோர்வுற ஆரம்பிக்கும்.
அத்துடன் மலம், சிறுநீர் போன்றவற்றில் இரத்தம் கசிவு அறிகுறி தென்படும்.
மேலும் உடல் பாகங்களில் ஆங்காங்கே படை திட்டுகள் உண்டாகுவதோடு உடலில் காயம் ஏற்பட்டால் நீண்ட நேரமாக இரத்த கசிவு இருக்கும்.
எனினும் இந்த அறிகுறிகளுக்கு ஆங்கில மருந்துகள் இருப்பினும் இயற்கையான முறையில் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய முடியும்.
அதற்கு பப்பாளி இலை சாறு பெரிதும் உதவுகிறது.
இந்த சாற்றினை எவ்வாறு தயார் செய்ய முடியும் என்பதை பின்வரும் வழிமுகைள் மூலம் பின்பற்றலாம்.
தயார் செய்யும் வழிமுறை
2 அல்லது 4 பப்பாளி இலைகளை தண்ணீரில் கழுவி விட்டு இலைகளிலுள்ள நரம்புகளை அகற்றி பப்பாளி இலைகளை சிறிய துண்டுகளாக போட வேண்டும்.
பின்னர் 200 மில்லிலீற்றுடைய தண்ணீரில் குறித்த இலைகளை போட்டு, அரைதேக் கரண்டி அளவில் சீரகம், மிளகு சேர்க்க வேண்டும்.
இதனையடுத்து அடுப்பை குறுகிய அளவில் வைத்து தயார் செய்ய வேண்டும்.
இந்த 200 மில்லிலீற்றர் தண்ணீரானது 100 மில்லிலீற்றராக குறையும் போது இலைகயை வடிகட்டி ஆற வைத்து விட வேண்டும்.
இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை 25- 50 மில்லி லீற்றர் வரை இயற்கை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பருகலாம்.
இது இரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்துவதோடு ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
ஆன்டி இன்ஃபிளமேட்டரி இருப்பதால் தோலில் உள்ள தடிமன்கள் (rashes), தசை வலி, மூட்டு வலி, உள்ளிட்டவை குணமாகும்.
கூந்தலின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானதாகும், தோலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும், புற்றுநோய் உருவாகும் செல்களை அழித்து அந்த நோயை வரவிடாமல் பாதுகாக்கும்.
அத்துடன் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சாற்றை பருகுவதனூடாக நோயின் வீரியம் குறைவடைவது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |