மாதவிடாய் பிரச்சனை இருக்கா? இதனை போக்க தினம் ஒரு உருண்டை இதை சாப்பிட்டாலே போதும்
இன்றைய காலத்தில் பல பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை இருக்கின்றது.
இந்த மாதவிடாய் பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளது. இருப்பினும் நமது கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி ஏற்படுவது, ஹார்மோனின் சமமற்ற நிலை இவையெல்லாம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இதனை எளிய முறையில் குணமாக்க முடியும். அந்தவகையில் தற்போது சூப்பரான லட்டு உருண்டை ஒன்றை எப்படி செய்வது என இங்கே பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- சூரியகாந்தி விதைகள் - 5 டீஸ்பூன்
- எள் விதைகள் - 5 டீஸ்பூன்
- ஆளிவிதைகள் - 5 டீஸ்பூன்
- பூசணி விதைகள் - 5 டீஸ்பூன்
- பெருஞ்சீரக விதைகள் - 2 டீஸ்பூன்
- தேங்காய்த்துருவல் - 10 டீஸ்பூன்
- ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்
- பேரீச்சம்பழம் - 4 தேன் தேவைக்கேற்ப
செய்முறை
- சூரியகாந்தி விதைகள், எள் விதைகள், ஆளிவிதைகள், பூசணி விதைகள் மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். அனைத்து விதைகளையும் குறைந்த தீயில் வறுக்கவும். 2- 3 நிமிடங்கள் வறுத்தால் போதும் அதன் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். இதை தட்டில் கொட்டி ஆறவிடவும்.
- தேங்காய்த்துருவலை ஏலக்காய் தூள் சேர்த்து விதைகளுடன் நன்றாக கலக்கவும். இந்த கலவையை மணம் வரும் வரை தொடர்ந்து வறுக்கவும். இவை பழுப்பு நிறமாக மாறும் வரை இந்த கலவையை கலக்கவும்.
- இந்த கலவையை தட்டில் கொட்டி ஆறவிடவும். பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி ப்ளெண்டரில் சேர்த்து அரைக்கவும். பிறகு தட்டில் வைத்திருக்கும் விதைகள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- பிறகு இறுதியாக் தேங்காய்த்துருவல் ஒரு சுற்று சுற்றி அரைக்கவும். கலவை இறுக்கமாக இருந்தால் சிறிது தேன் விட்டு கலக்கவும். பிறகு இந்த கலவையை நன்றாக கலக்கி விடவும்.
- கலவை அனைத்தும் நன்றாக கிளறியதும், கலவையின் சிறிய பகுதிகளை எடுத்து சிறு சிறு உருண்டையாக உருட்டிவிடவும். லட்டுகளாக தயாரித்ததும் இதை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். இதை தினமும் ஒன்று சாப்பிட்டு வரவும்.
குறிப்பு
இந்த லட்டு எடை அதிகரிப்பை தூண்டலாம். இதை தவிர்க்க உடல் பயிற்சி செய்வதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.