சிறுநீரில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கா? இதனை கட்டுக்குள் வைக்க இதோ அற்புத தீர்வு!
சிறுநீரில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அவர்கள் அதை கட்டுக்குள் கொண்டு வருவது முக்கியமானது. இல்லாவிடின் இது உடலுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக மாறிவிடுகின்றது.
சிறுநீரில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அவர்கள் அதை கட்டுக்குள் கொண்டு வர மருதம் மர பட்டையை எடுத்துகொள்ளலாம்.
அந்தவகையில் தற்போது இதனை எவ்வாறு எடுத்து கொள்ளலாம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
தேவையானவை
- மருதம் மரத்தின் பட்டை - 10 கிராம்
- ஆலமரத்து விழுதின் நுனி - 10 கிராம்
- நாவல் மரத்தின் பட்டை - 10 கிராம்
செய்முறை
-
முதலில் அனைத்தையும் எடுத்து சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு நீர்விடவும். இதை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி காலை, மாலை வேளைக்கு அரை டம்ளர் வீதம் குடித்து வர வேண்டும்.
- தொடர்ந்து 48 நாட்கள் வரை எடுத்து வந்தால் பலன் தெரியும்.
இதை பயன்படுத்துவதற்கு முன்பு சிறுநீரில் சர்க்கரையின் அளவு எவ்வளவு என்பதை பரிசோதிக்க வேண்டும்.
- பிறகு அதை குறிப்பிட்டு வைத்து இந்த மருந்தை தொடர்ந்து எடுத்துகொள்ள வேண்டும்.
பிறகு பரிசோதித்து பார்த்தால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்திருப்பதை பார்க்கலாம்.
- ஒரளவு குறைந்திருப்பதை கண்டால் மீண்டும் 21 நாட்கள் இதை சாப்பிடலாம். ஆனால் இதற்கு தேவையே இல்லாமல் சிறுநீரில் சர்க்கரை அளவு வெகுவாகவே குறைந்திருக்கும்.
குறிப்பு
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் பரிசோதனையின் மூலம் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால் மேற்கண்ட இந்த குறிப்பு பலன் அளிக்கும்.
ஆனால் சுயமாக நீங்களே சிகிச்சை மேற்கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனையோடு சரியான முறையில் சரியான பதத்தில் எடுத்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பான முறையில் ஆரோக்கியம் பெற முடியும்.