களம்கண்ட முதல் ஆட்டத்திலேயே அடுக்கடுக்கான சாதனையை செய்த இந்திய அணி இளம்வீரர்! பிறந்தநாளில் அசத்தல்
களமிறங்கிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலேயே பல சாதனைகளை படைத்துள்ளார் இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன்.
இலங்கை - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்தியா சார்பில் முதல் முறையாக தனது பிறந்தநாளான நேற்று களமிறங்கிய இளம் வீரர் இஷான் கிஷன் பல சாதனைகளை புரிந்துள்ளார்.
நேற்றைய போட்டியில் 33 பந்துகளில் தனது அரை சதத்தைக் கடந்த இஷான் கிஷன், 2 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதன் மூலம் அவர் நிகழ்த்தியுள்ள முக்கிய சாதனைகள்
முதல் ஒருநாள், டி20 ஆட்டங்களில் அரை சதங்களை எடுத்த 2-வது வீரர்.
33 பந்துகளில் அரை சதம் எடுத்து அறிமுக ஆட்டத்திலேயே விரைவாக அரை சதம் எடுத்த 2-வது வீரர். இந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிரான தனது அறிமுக ஆட்டத்தில் 26 பந்துகளில் அரை சதம் எடுத்த கிருனால் பாண்டியாவின் சாதனை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
59 ரன்களுடன் முதல் ஒருநாள் ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர்.
2001-க்குப் பிறகு அறிமுக ஆட்டத்தில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த முதல் வீரர்.
இவ்வாறான புதிய மைல்கல்லை கிஷன் தொட்டுள்ளார்.