பெண்கள் ஏலம்! Bulli Bai ஆப்பை உருவாக்கிய இளைஞன் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்
பெண்களை ஏலம் விடும் புல்லி பாய் என்ற செயலியை நடத்தி வந்த நீரஜ் பிஷ்னோய் இளைஞர் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி ஏலம் விடும் Bulli Bai என்ற செயலி இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
னெனில், இந்த Bulli Bai செயலியில் 100-க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படத்தை பதிவேற்றி ஏலம் விட்டுள்ளனர்.
இது குறித்து புகார் வந்த நிலையில், இந்த செயலியை உருவாக்கி நடத்தி வந்த விஷால் ஜா என்ற 21 இளைஞர், 17 வயது இளம் பெண் ஆகியோரை மும்பை பொலிசார் கைது செய்தனர்.
அதன் பின், இந்த செயலிக்கு பின் மாஸ்டர் மைண்டாக இருந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞர் அசாமில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அந்த மாணவரின் பெயர் நீரஜ் பிஷ்னோய் என்பதும், இந்த செயலியை உருவாக்கியது இவர்தான் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அதன் பின் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், கைதான நீரஜ் பிஷ்னோய் அசாம் மாநிலத்தில் போபாலில் இருக்கும் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிடெக் படித்து வந்துள்ளார்.
இவரின் சொந்த ஊர் ராஜஸ்தான். Bulli Bai செயலி மட்டுமின்றி, முன்பு உருவாக்கப்பட்டு பின் தடை செய்யப்பட்ட Sulli Deals செயலிக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவரின் கணினியில் பல ஆயிரம் பெண்களின் புகைப்படங்கள் இருந்துள்ளன. நீரஜ் பிஷ்னோய் கணினியை சோதனை செய்ததில் பல முக்கிய ஆதாரங்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளன.
இவர் 15 வயதில் இருந்தே ஹேக்கிங் செய்து வந்துள்ளார். தனது தங்கைக்கு பள்ளி ஒன்றில் அட்மிஷன் கிடைக்கவில்லை என்பதால் அந்த பள்ளியின் இணைய பக்கத்தை நீரஜ் பிஷ்னோய் 15 வயதிலேயே ஹேக்கிங் செய்து இருக்கிறார்.
அதன்பின் பல வருடமாக இப்படி பல இணைய பக்கங்களை ஹேக் செய்துள்ள இவர், பெண்களின் பேஸ்புக் பக்கங்களையும் ஹேக் செய்துள்ளார். இவரின் கணினியை சோதனை செய்ததில் 153 ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன.
கணினி முழுக்க 18+ வீடியோக்கள், புகைப்படங்கள், ஆபாச கேம்கள் இருந்துள்ளன. நீரஜ் பிஷ்னோய் தன்னை விட வயது கூடுதலாக இருக்கும் பெண்கள் மீது இவர் மோசமான ரீதியிலான பாலியல் உணர்வுகளை கொண்டு இருந்துள்ளார்.
மேலும், பொலிஸ் விசாரணையில் நான் தான் இந்த செயலியை நடத்தி வந்தேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் நான் செய்ததில் தவறு இல்லை.
இப்படித்தான் செய்வேன். இதுதான் நல்லது என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.