போர் முனையில் சிக்கிய பிரித்தானியர்கள்... வெளியேற வாய்ப்பில்லை என ஒப்புக்கொண்ட இஸ்ரேல்
இஸ்ரேலில் இருந்து வெளியேற்றுவது தற்போது சாத்தியமற்றது என்று அதிகாரிகள் ஒப்புக்கொண்ட நிலையில், பல்லாயிரக்கணக்கான பிரித்தானிய குடிமக்கள் போர் முனையில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
60,000 பிரித்தானியர்கள்
ஈரானின் தொடர்ச்சியான உக்கிரத் தாக்குதல்களுக்கு மத்தியில், பிரித்தானியாவின் வெளிவிவகாரத்துறை இஸ்ரேலுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்க அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயணிகள் விமானங்களுக்கான அனுமதிகள் இஸ்ரேல் முடக்கியுள்ள நிலையில், இஸ்ரேலில் இருந்து பிரித்தானியர்களை வெளியேற்றும் அரசாங்கத்தின் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், சுமார் 60,000 பிரித்தானியர்கள் தற்போது இஸ்ரேலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரேலில் தற்போது சிக்கியுள்ள பிரித்தானிய மக்களின் பாதுகாப்பு எங்களின் முன்னுரிமையாக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாமி குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு பதிலடி
அத்துடன் இஸ்ரேல் விமானங்களுக்கான அனுமதி மறுத்துள்ள கட்டத்தில், எவரேனும் சாலை ஊடாக நாட்டை விட்டு வெளியேறும் முயற்சி மேற்கொள்வதென்றால் அது உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்றும் வெளிவிவகாரத்துறை எச்சரித்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் தொடர்ந்து உக்கிரத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இதுவரை காஸா பகுதியில் அப்பாவி மக்களின் குடியிருப்புகளை சேதப்படுத்துவதை பொழுதுபோக்காக செய்து வந்த இஸ்ரேலுக்கு,
தற்போது ஈரான் ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்துள்ள பகுதிகளில் இருந்து இடிபாடுகளை அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |