விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி இஸ்ரேலிய தம்பதி பலி! பெற்றோரை பறிகொடுத்த 4 பிள்ளைகள்
அமெரிக்காவின் ட்ரக்கி தாஹோ விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் இஸ்ரேலிய தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இஸ்ரேலிய தம்பதி
இஸ்ரேலின் முன்னாள் கால்பந்து வீரரும், தொழில்நுட்ப உலகில் தொழில்முனைவோருமான லிரோன், தனது மனைவி நவோமி பெட்ருஷ்கா உடன் அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கினர்.
வடக்கு கலிபோர்னியாவில் அவர்கள் சென்ற விமானம், ட்ரக்கி தாஹோ விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே லிரோனும், நவோமியும் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான காரணம் இதுவரை அறிப்படவில்லை.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம்
இருவரின் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எத்தனை பேர் விமானத்தில் இருந்தனர் என இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் ஆகியவை நிலையமையை ஆய்வு செய்யும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில் உயிரிழந்த லிரோன், நவோமி தம்பதி கடந்த சில ஆண்டுகளாக கலிபோர்னியாவில் வசித்து வந்தனர். இவர்கள் தங்கள் 4 பிள்ளைகளை தனியே விடுத்திருந்தனர் என்றும் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |