காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த காட்சிகள் அதிர்ச்சியை உருவாக்கின: ஜேர்மன் சேன்ஸலர்
காசா பகுதியிலுள்ள, அல்-அஹ்லி அரபி பாப்டிஸ்ட் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.
ஜேர்மன் சேன்ஸலர் கருத்து
இந்நிலையில், காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த காட்சிகள் தனக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.
I am horrified by the images of the explosion in a hospital in Gaza. Innocent civilians were injured and killed. Our thoughts are with the families of the victims.
— Bundeskanzler Olaf Scholz (@Bundeskanzler) October 18, 2023
A thorough investigation of the incident is imperative.
அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்லார்கள், காயமடைந்துள்ளார்கள் என்று கூறியுள்ள ஷோல்ஸ், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படுவது அவசியமாகும் என்றும் கூறியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |