நடுக்கடலில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்! எந்த நாட்டுக்கு சொந்தமானது? பிரித்தானியா வெளியிட்ட முக்கிய தகவல்
ஓமான் கடலில் இஸ்ரேலுக்குச் சொந்தமான வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு Duqm துறைமுகத்திலிருந்து சுமார் 175 மைல் தொலைவில் இந்த தாக்குதல் நடந்ததாக பிரித்தானியாவில் கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த தாக்குதலுக்கும் கடற்கொள்ளையர்களுக்கும் தொடர்பில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
அரேபியன் கடலில் இஸ்ரேலுக்கு சொந்தமான வணிகக் கப்பல் தாக்கப்பட்டதாக பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடந்து வருவதாக பிரித்தானியா கடல்சார் வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது வரை இந்த தாக்குதல் குறித்து ஓமான் அதிகாரிகள் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கவில்லை.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளானது இஸ்ரேலுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் எனவும், இதில் கப்பல் குழுவினர் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், ஈரான் கடற்படை இத்தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்த கடல் பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு சொந்தமான கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
தங்கள் கப்பல் மீதான தாக்குதலுக்கு இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருவதன் விளைவாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்துள்ளது.