பூமியை கண்காணிக்க புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ
ஆபரேஷன் சிந்தூரையடுத்து, இந்தியாவின் பாதுகாப்பிற்காக பூமியை கண்காணிக்க புதிய செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மே 18, 2025 அன்று PSLV-C61 ரொக்கெட் மூலம் ரிசாட்-1B (RISAT-1B) என்ற புதிய ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த தயாராக உள்ளது.
இந்த செயற்கைக்கோள் Operation Sindoor பின்னணியில் வெளிவரும் முக்கியமான செயற்பாடாக பார்க்கப்படுகிறது.
சுமார் 1,710 கிலோ எடையுள்ள ரிசாட்-1B, சூரியனுடன் ஒத்தபாதையில் (Sun-synchronous orbit) 529 கி.மீ உயரத்தில் நிலைநாட்டப்படும்.

இது முழுமையாக செயல்படத் தொடங்க மூன்று மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் C-band Synthetic Aperture Radar (SAR) கொண்டு அனைத்து காலநிலை, பகல்/இரவு நேரங்களிலும் தெளிவான நிலதள படங்களை அளிக்க முடியும்.
ரிசாட்-1B, பயங்கரவாத முகாம்கள், எல்லைப் பிரச்சனைகள் மற்றும் முக்கிய கட்டடங்களை கண்காணிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவின் எல்லைகள், கடற்கரைப் பகுதிகள், பனிமலைகள், வனங்கள் என பலவகைபட்ட நிலப்பரப்புகளை கண்காணிக்க இது உதவும்.
இஸ்ரோ இதற்கு முந்தைய RISAT-2, RISAT-1, RISAT-2B, RISAT-2BR1 போன்ற செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக ஏவியுள்ளதுடன், இதுவும் அந்த தொடரில் அடுத்த பரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்த செயற்கைக்கோளின் விரைவான ஏவல், சமீபத்திய பாதுகாப்புச் சூழ்நிலைகளுக்கான விரைவு பதிலடையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |