ஆங்கிலக் கால்வாயில் மூழ்கி உயிரிழக்கும் முன் புலம்பெயர்வோர் ஒருவர் கடைசியாக கூறிய வார்த்தைகள்
பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாயில் படகு மூலம் பயணித்த புலம்பெயர்வோர் 27 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தில் பலியான ஒருவர், உயிரிழக்கும் முன், தன் நண்பர் ஒருவரை அழைத்து அவரிடம் கூறிய சில்லிடவைக்கும் வார்த்தைகள் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நேற்று முன் தினம், பிரித்தானியாவில் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கும் நம்பிக்கையில், பிரான்சிலிருந்து சிறிய படகு ஒன்றில் 34 புலம்பெயர்வோர் பிரித்தானியாவை நோக்கி பயணித்துள்ளனர்.
ஆங்கிலக்கால்வாயில் அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், அந்த படகு தண்ணீரில் மூழ்க, அதில் பயணித்தவர்கள் தண்ணிரில் மூழ்கியுள்ளனர். இருவர் மட்டும் மீட்கப்பட, 27 பேரை சடலங்களாகத்தான் மீட்க முடிந்துள்ளது.
அவர்களில் ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தியும் கிடைத்துள்ளது. மொத்தம் 17 ஆண்கள், 7 பெண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகியோரின் உயிரிழந்த உடல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், அந்த படகில் பயணித்த Mohammad Aziz (31) என்னும் ஈராக்கிய குர்திஷ் இனத்தவரான ஒருவர், தன் நண்பரான Peshraw Aziz என்பவரை மொபைலில் அழைத்துள்ளார்.
அப்போது, தாங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் படகு மூழ்கிவிடும் என்ற அச்சத்தில் அவர் நடுங்கிக்கொண்டிருந்ததை தான் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார் Peshraw Aziz. நாங்கள் பயணிக்கும் படகு நல்ல படகு இல்லை, அதன் எஞ்சின் போதுமான சக்தி கொண்டது அல்ல, நாங்கள் பிரித்தானியா போய்ச் சேருவோமா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் Mohammad Aziz.
இதற்கிடையில், பலியானதாக கருதப்படும் Riaz Mohammed 12)Share Mohammed (17), Palowan (16) மறும் Shinai (15) ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முந்தைய முறை பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, லைஃப் ஜாக்கெட்களுடன் அவர்கள் நிற்கும் புகைப்படத்தை காணலாம்.
நேற்று அவர்களை மொபைலில் தொடர்புகொள்ள முயன்ற அவர்களது நண்பர்கள், அவர்களை தொடர்பு கொள்ள இயலாததால், அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என கவலைக்குள்ளாகியுள்ளார்கள்.