ஜன்னல் திரையை மூடாமல் காதலர்கள் செய்த செயல் - போக்குவரத்து நெரிசலால் திணறிய மேம்பாலம்
ஹோட்டல் அறையில் காதலர்கள் செய்த கவனக்குறைவால் ஜெய்ப்பூர் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஹோட்டல் அறையில் காதலர்கள்
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், காதலர்கள் இருவர் பிரபல ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அறையில் நெருக்கமாக இருந்த காதலர்கள், ஜன்னல் திரையை மூட மறந்துள்ளனர்.
அந்த ஹோட்டல் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்ற நபர், இதனை கவனித்து வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ பரவியுள்ளது.
மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்
மேலும், அந்த மேம்பாலத்தின் வழியே வாகனங்களில் சென்றவர்கள், இதனை கவனித்து வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்க்க தொடங்கியுள்ளனர்.
இதனால் அந்த மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த காவல்துறையினர், அந்த அறையை தட்டி, ஜன்னலை மூட செய்ததோடு, அங்கு கூடியிருந்த மக்களையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.
காதலர்களின் தனிப்பட்ட செயல்களை சட்டவிரோதமாக வீடியோ எடுத்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேவேளையில், தனிப்பட்ட நேரங்களில் ஜன்னல் திரைசீலைகளை மூடாமல் கவனக்குறைவாக இருந்த காதலர்களை பலரும் கண்டித்து வருகின்றனர்.