கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஜாம்பவான்களும் செய்யாத சாதனையை படைத்த ஜெய்ஸ்வால்
கிரிக்கெட்டில் எந்த ஜாம்பவான்களும் செய்யாத சாதனை ஒன்றை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 359 ஓட்டங்கள் குவித்துள்ளது.
அணித்தலைவர் சுப்மன் கில், 127 ஓட்டங்களுடனும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 65 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ஜெய்ஸ்வால் சாதனை
இந்த போட்டியில் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சதமடித்தன் மூலம், எந்த ஜாம்பவானும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா மண்ணில் விளையாடும் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த ஒரே வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
முன்னதாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 2024-25 பார்டர் கவாஸ்கர் கோப்பையில் முதல் டெஸ்ட் போட்டியிலே, 161 ஓட்டங்கள் எடுத்து, அவுஸ்திரேலியா மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
THE HUNDRED CELEBRATION BY JAISWAL 🥶 pic.twitter.com/cIXJmOej9X
— Johns. (@CricCrazyJohns) June 20, 2025
சச்சின் இங்கிலாந்து உடனான முதல் தொடரிலே சதமடித்திருந்தாலும், 2வது டெஸ்ட் போட்டியில்தான் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
அதே போல், அவுஸ்திரேலிய மண்ணில் தனது 3வது போட்டியில் தான் சதமடித்தார். இதன் மூலம், கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஜாம்பவானும் செய்யாத சாதனையை 23 வயதான ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |