பும்ரா வேண்டும் என்றே அப்படி செய்தார்! இந்தியாவின் திட்டம் அது: உண்மையை விளக்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன்
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடந்த சில தகவல்களை கூறியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரு அணி வீரர்களுக்கிடையே மோதல் போக்கு சற்று அதிகமாகவே இருந்தது.
தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடந்த நிகழ்வுகளே அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக பும்ரா மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவருமே மோதிக் கொண்டது பெரிய அளவில் பேசப்பட்டது. அதிலும் பும்ரா தன்னுடைய பந்து வீச்சின் மூலம் ஜேம்ஸ் ஆண்டர்சனை பவுன்சர் மூலம் மிரட்டினார்.
இந்நிலையில், இது குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் இது குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில், என்னை அவுட் ஆக்கும் நோக்கத்தில் பும்ரா பந்து வீசவில்லை இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஒரு ஓவரில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பவுன்சர் பந்துகளை பும்ரா வீசி நெருக்கடியை ஏற்படுத்தினார்.
4 நோ பால் உட்பட மொத்தமாக ஒரு ஓவரில் 10 பந்துகளை அவர் தன்னை மட்டும் குறி வைத்து வீசியதாக கூறியுள்ளார். இருப்பினும் அவர் தன்னை அவுட்டாக்கும் விதத்தில் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.
அவர் எந்த திட்டத்தில் தனக்கு அவ்வாறு தொடர்ச்சியாக அதிவேக பவுன்சர் பந்துகளை வீசினார் என்று இப்போது வரை புரியவில்லை.
அதே சமயம் இந்திய வீரர்கள், ஏதோ ஒரு திட்டத்துடன் தான் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது என்று விளக்கமளித்துள்ளார்.